பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்னினத்தை அன்னியமாய்

ஒதுக்க லாலே

தரையுயர்ந்து (?) வாழுவது

மனித மந்தை!

கண்ணைப் போல் தன்னினத்தைக்

கருத வேண்டும்;

கெளரவமாம் மேல்பூச்சை

அகற்ற வேண்டும்!

‘என்னினத்தான் என்றணைத்துக்

கொள்ள வேண்டும்;

ஏழைகளின் தொண்டினிலே

சிறக்க வேண்டும்!