இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வால்ப்பந்தல்
எத்தனையோ சீர்திருத்தத்
தொண்ட ரெல்லாம்
ஏழ்மையெனும் மணற்குன்றில் சரிந்து வீழ்வார்!
எத்தனையோ கலைவளர்க்கும்
அறிஞ ரெல்லாம்
இல்லாமைப் புதைகுழியில் புதைந்து போவார்!
எத்தனையோ வீரர்களும்
நாட்டின் மாண்பை எழுதுகிற கவிஞர்களும்
சருகாய் ஆவார்!
எத்தனையோ பிறவிகளும்
வறுமைத் தீயில்
இளமையிலே மொட்டினிலே
கருகிப் போகும்!
ஏழ்மைக்குச் சாவுமணி
அடிப்போ மென்றும்
இல்லாமை இல்லாமல்
உழைப்போ மென்றும்