இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தார்க்கோல்
உழுபவர்க்குக் கைக்கோல்'
உயிர்களுக்கு அன்னக்கோல்
உழைப்புக்கு ‘நெம்புகோல்'
உலகுக்கு ஊன்றுகோல்!
புஞ்சை பொன்னாக்குவதால்
பொருளுக்கே ஆதாரம்:
நஞ்சை அமுதாக்குவதால்
நாட்டுக்கே ஆகாரம்:
ஊர்வரிசை யாய்நின்று
உதவுவதே என்னால்தான்!
ஏர்வரிசை என்றாலே
ஏறுவரிசை தான்!
அன்றுநான் பெற்றுவந்த
அவ்வரங்கள் தா-வரங்கள்!
இன்றைக்கு என்மடியில்
எத்தனையோ புதுரகங்கள்!