பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தார்க்கோல்

உழுபவர்க்குக் கைக்கோல்'

உயிர்களுக்கு அன்னக்கோல்

உழைப்புக்கு ‘நெம்புகோல்'

உலகுக்கு ஊன்றுகோல்!

புஞ்சை பொன்னாக்குவதால்

பொருளுக்கே ஆதாரம்:

நஞ்சை அமுதாக்குவதால்

நாட்டுக்கே ஆகாரம்:

ஊர்வரிசை யாய்நின்று

உதவுவதே என்னால்தான்!

ஏர்வரிசை என்றாலே

ஏறுவரிசை தான்!

அன்றுநான் பெற்றுவந்த

அவ்வரங்கள் தா-வரங்கள்!

இன்றைக்கு என்மடியில்

எத்தனையோ புதுரகங்கள்!