பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லில் வித்துவான்

பூமியைத் திறக்கின்ற பொன்சாவி விவசாயி! பூமியை ஈர்க்கின்ற புவிஈர்ப்புத் தானம் நான்!

என்னுடைய இயக்கம்தான் இம்மண்ணின் உயிரியக்கம்! என்னுடைய ஏற்றம்தான் இந்நாட்டின் முன்னேற்றம்!

இசைக்குடும்பம் என்குடும்பம்; இசைமேடை என்வயல்கள்! வசப்படுத்தும் கலைஞன்தான், 'வயலின்வித் துவான்"நான்!

தார்க்கோ லின் தயவில் செங்கோல் நடப்பதனால், ஏர்க்காலைத் தவிர எவர்காலும் பிடிப்பதில்லை!