பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தில் மலிக்கைாடி இருப்படை...

உணவுமண்டலத்தை உருவாக்கும் இவர்களுக்குக் கனவு மண்டலத்தில் கையளவு கஞ்சிவரும்!

ணவுக்கும் வயிற்றுக்கும் | டன்படிக்கை இல்லாமல் கனவுக்கும் வாழ்க்கைக்கும் கடைசிவரை போராட்டம்!

கட்டுண்ட ஏழையின் கண்ணிரைத் துடைப்பதற்குக் கட்சிக் கொடியெதுவும் கைக்குட்டை ஆகவில்லை!

கந்தையும் இல்லாமல் கலங்குகின்ற ஏழைக்கு இந்திய மணிக்கொடியும் இடுப்பாடை யாகவில்லை!

தருமச் சக்கரத்தின் தடம்புரண்டு போனதனால் வறுமைச் சக்கரத்தில் - இவர் வாழ்க்கைத்தேர் உருள்கிறது!