பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊசிகள் செல்வோம்...

வெட்டுவ தற்குக் கோடரி உயர்த்திக் கொட்டி முழக்கும் தோழனே, நிதானி!

பிளக்கும் கருவியை இறக்கு உருக்கு! பிளக்கும் ஒற்றைக் கோடரி யில்நாம் தைக்கும் ஊசிகள் ஆயிரம் செய்யலாம்!

தாக்கும் ஆயுதம் தைக்கவும் உதவுமே!

உனது உடையின் கிழிசலை மட்டுமா? உலகப் படத்தின் கிழிசலும் தைக்கலாம்!

கொண்டுவா தோழனே, கோடரியை நாம் துண்டுகள் போடுவோம், ஊசிகள் செய்யவே!