இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தேவர் உலகத்தைத்
தெரியக் கண்டதில்லை;
.!,ി உலகத்தின்
அத்தாட்சி ஆனாய்நீ!
நிலமகளும் நீயும்
நெடுநாள் காதலர்கள்; சிலசமயம் உங்களுக்குள்
சிற்றின்பம் நிகழ்வதுண்டு!
தேவியை நீர்வடிவில்
தீண்டித் தழுவுகிறாய்;
ஆவி வடிவத்தில்
அவளுன்னை அணைக்கின்றாள்!
வெற்றுடலின் தழுவல்கள்தான்
வேட்கையெனக் காட்டாமல்
முற்றும் நூதனமாய்
மோகத்தை விளக்குகிறாய்!