இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
發
முழுமதில் பிறைநிலவு
பொன்னி நதிக்கரையில்
பூக்குலங்கள் அணிவகுக்கும்;
கன்னி இளமங்கை
கைநிறைய மலர்கொய்தாள்!
'பூந்தோட்டம் யாருக்குப்
பூப்பறிக் கிறதென்ன்றேன்;
மாந்தளிர் திரும்பி,
மையலுடன் நகைத்தாள்!
'முழுநிலவு பாருங்கள்!"
முறுவலுடன் காட்டினாள்; 'முழுமதியில் பிறைநிலவு
முளைக்குமா? எனக் கேட்டேன்!
புரியாமல் நின்றாள் என்
புதிரைக் கேட்டுவிட்டு;
தெரியாத பெண்ணுக்குத்
தெளிவுரை தந்தேன்நான்!
தோன்றும்உன் இனிய முகம்
தூய முழு நிலவாகும்;
மூன்றாம் 'பிறை'யுந்தன்
'முறுவலிலே உருவாகும்!