இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
'உன்சுவாசம் தானெனக்கு
உட்சுவாசம் என்றுரைத்தாய்!
'என்சுவாசமே, இங்கு
என்றைக்குத் திரும்பிடுவாய்?
அன்றைக்கு நீதொட்ட
அந்தந்த இடமெல்லாம் தென்றல் தொட்டதனால்
தீப்புண்ணாய் மாறியது!
மருந்துடன் வரும்நாளை
மனதுக்குள் எதிர்பார்த்து,
இருந்துன் வழிபார்த்து
இருக்கின்றேன், சாகாமல்!
தன்னுயிரைத் துறக்கின்ற
தற்கொலைக்கு அஞ்சவில்லை - அது
உன்னுயிர் என்பதனால்
உயிர்க்கொலைக்கு அஞ்சுகிறேன்!