பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலித்தொகையைப் போர்க்களத்தில் புறங்கண்ட மாவீரன் கலித்தொகைக் காதலியின் கைவிலங்கில் சிறைப்பட்டான்!

குரல்வளையில் ஒலியடங்கிக் கரவளையில் ஒசையெழும் விரல்நுனியில் நகம்உரசி விழிமுனையில் தீப்பிடிக்கும்!

மொழிவிலக்கி வைத்துவிட்டு 'மூச்சுகளே பேச்சாக விழிவிளக்கின் வெளிச்சத்தில் வெட்கத்தால் கரைகின்றாள்!

o

o