பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్లౌ

... ... .

...

...


தமிழகி வருக

பொன்முடி சூடிய தலைமகளே,

புகழ்முடி சூடிய கலைமகளே! உன்முடி வீழ்ந்தது தரைமடியில்;

உன்னிலை தாழ்ந்தது எவர்செயலில்? தன்முடி வளர்க்கும் இளைஞர்குலம்

தமிழ்'முடி யிறக்கும் பணிசெய்தால் நன்முடி வெங்கே உருவாகும்?

நம்தலை முறைக்குப் பழியாகும்!

செந்தமிழ் மொழியைத் தீண்டாமை

சிலதமிழ் மனத்தின் லட்சியமா? நந்தமிழ் தன்னைப் பயிலாமை

நம்மவர் நாவின் கொள்கைகளா? பைந்தமிழ் வழங்கும் தாய்ப்பாலைப்

பருகக் கன்றுகள் மறந்தது என்? எந்தமிழ் உனது இசையினிமை

இறைவன் செவிகள் துறந்தது ஏன்?