இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தேவை - சிலர் துறவு...
முரசறையும் அழகு சிலை,
பருவ மேனி; மோகனத்தை வாகனமாய்க்
கொண்ட பாவை! அரசியிவள், வேசியரில்
'அல்லி என்னும் அழகியிவள்; பழகுபவர்
கையில் வீணை!
சரசமிவள் மதுரகலை;
பருவத் திண்ணை; சமதர்ம இரவுகளை
வளர்க்கும் கன்னி! விரசமிவள் விழிமூலம்;
இவள்தான் மற்ற விதிகளும் தொடுகின்ற
ராஜ வீதி!
இதமான இளவேனில்
மாலை நேரம்; இனியதொரு சோலையிலே
அழகு மங்கை விதமான மலர்கொய்து
நின்றாள்; அந்த வேளையிலே 'இளந்துறவி
அங்கு வந்தான்!