இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மிதமான உணர்வுகளை நெறிப் படுத்தி, மெய்ம்மையினைக் காண்பதற்கு முயல்வோன்; தன்னைப் பதமாகத் தன்மடியில்
வீழ்த்தப் பார்ப்பாள்; பாவைமயில் ஆட்டத்தைத்
தொடங்க லானாள்!
'உன்வரவு, நல்வரவு!
என்றாள், அல்லி, உத்தமனோ சலனமின்றிச்
சிரித்தான் மெல்ல! "என்வரவால் உனக்கெந்த
வரவும் இல்லை' எனவிரித்தான்; இளமங்கை
வலை விரித்தாள்!
‘என்னுடலின் உறுப்பிலக்
கணம் படிப்போர்
எல்லார்க்கும் பகுபதம் நான்
என்றாள்; துறவி,
சின்னவளே நானென்றும்
s 'பகாப் பதம்தான்,
சிந்தையினைக் கட்டிவைத்த
தாலே என்றான்!