இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
'நெய்வதற்குத் தானிங்கு
நூல்என் றாலும் நெசவுகளை விரும்பாமல்
ஒதுங்கி வந்த தையல்நூல் நான் என்றான்;
கன்னி, இந்தத் தையலுக்கு உதவாத
நூல்தான், என்றாள்!
'மனங்கெட்டுப் பின்திருந்த
முயலும் மாந்தர் மனக்கிழிசல் தைப்பவன்நான்;
எனது வார்த்தை, மனந்தொட்டுத் தன்னளவில்
உணர்ந்தால் போதும்; மறுபடியும் நல்வாழ்வு
மலரும்; மனித
இனங்கெட்டுப் போகாமல்
காப்ப தற்கு என்போன்றோர் சிலர்துறவு தேவை என்றான்! தினம்கெட்டுப் போனவளும்
இதனைக் கேட்டு 'திருந்துதற்கு முயலுகிறேன்
என்று ரைத்தாள்!