இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
© @ © வேல்டாம், மகாத்மா!
தேசத் தந்தையே!
போதையிலே கிடக்கின்ற பொதுமக்கள் நாங்கள்; உன் பாதையினைத் தொலைத்துவிட்ட பாரதத்துக் குடிமக்கள்!
இதிகாச மருந்துகளை ஏற்பதற்கு மனமின்றி இதிகாச நோய்களுக்கு
இரையாகிப் போனவர்கள்!
காவியங்கள் நேர்வழியைக் காட்டினாலும் எங்களது ஆவியெங்கும் கோணல்வழி ஆதிக்கம் செய்கிறது!
வெகுநாளாய்ச் சேர்ந்துவரும் விரல்நுனியின் அழுக்குகளை
நகத்துக்குச் சோறென்று நாங்கள் விட்டுவிட்டோம்!
நாளைச் செலவழிக்க நாங்கள் நினைப்பதல்லால் மூளையைச் செலவழிக்க முயலுவதே கிடையாது!