பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேரடில் தத்துவங்கள்...

மதிவிளக்கம் பெறுவதற்குக் குறட்பா; தேடும் மனவிளக்கம் தருவதற்கு அருட்பா, சூழும்

விதிவிளக்கம் பெறுவதற்கு நீதி நூல்கள்;

வேரடியில் தத்துவங்கள் நூறி ருந்தும்

மதிமாற வில்லையிங்கு வாழும் மக்கள்

மனம்மாற வில்லை! நாம் போகும்பாதை

நதிமாற வில்லையெனில் கெடுதல் இல்லை;

நாம்மாற வில்லையெனில் விடிவே இல்லை

எத்தனையோ உத்தமர்கள் பிறந்த மண்ணில்

எவரின்று உண்மைவழி செல்லு கின்றார்?

புத்தனெனும் தேவன்மொழி எவர்நி னைத்தார்? புனிதமகான் காந்திவழி எவர்தொ டர்ந்தார்?

தத்துவத்தார் பாதையிலே எவர்ந டந்தார்?

தலைமக்கள் போதனைகள் எவர்ம தித்தார்?

சத்தமிடும் மனித இனம் யாவும் காசின்

சத்தத்தில் சத்தியத்தை மறந்த தம்மா!