பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

效&冕

|

மீறல்கள்...

பாதையிலே ஊன்றுகோலாய்க்

குறளைப் பெற்றோம்; பதவுரையும் பொழிப்புரையும் எழுதத் தானா? காதையிலே நாயகர்கள்

செயல்கள் யாவும் கதைகாலட் சேபத்தில் முடிக்கத் தானா? கோதைகளின் காவியங்கள்

எல்லாம் இங்கே கூத்தாக அரங்கத்தில் நடிக்கத் தானா? மேதைகளின் அறிவுரைகள்

வாழ்க்கை யாவும் மேடையிலே சொற்பொழிவு நிகழ்த்தத் தானா? போலிகளின் கவர்ச்சியிலே

கண்ம யங்க போக்கற்று வழிதவறிக் கால்தொ டங்க வேலிகளை விதிமுறையை

மீறி யெங்கும் வீதிகளில் திரிவதுஏன் வெற்றி ளைஞர்?