இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஆஸ்லே முறுைக்காத கிழக்கு?
புறவெளிச்சம் கருக்கொள்ளா
மலட்டுக் கண்கள்; பொலிவிழந்த முகத்தில் இரு
பூச்சி யங்கள்!
பொறியிழந்த என் வாழ்க்கைச் சரித்திரத்தில் பூகோளம் பார்த்தறியா விழிக்கோ ளங்கள்!
கற்பனைகள் எனக்குண்டு
வடிவம் இன்றி!
கனவுகளும் வருவதுண்டு வண்ணம் இன்றி!
கற்றவைகள் நெஞ்சிலுண்டு
காட்சி இன்றி; கலங்குகிறேன் பார்வைக்கு
மீட்சி இன்றி!
சுரக்கின்ற கண்ணிதான் இருப்பு நானோ சூரியனே முளைக்காத கிழக்கு!
சலனமிலாச் சவப்பார்வை;
சூனி யத்தில் சஞ்சரிக்கும் விழிப்பாவை உயிர்க்கச் செய்வீர்!