இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
விழிகளுக்கு முடில்லை!
மண்தானம் பொன்தானம்
அன்னதானம் மற்றெந்த தானங்கள் எதற்கும் மேலாய்
'கண்தானம் மிக உயர்ந்த
தானம்; முன்பு கண்ணப்பன் கடவுளுக்கே
தந்த தானம்!
இறப்புக்குப் பின்னாலே
உங்க ளோடு இருவிழியும் எரிப்பதனால்
பயன்தான் என்ன?
முடிவுரையில் உங்கள் இமை மூடும் போது முகவுரையை என்இமையில் எழுத லாமே!