பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'முருகப்பன் சர்.சி.வி நிழலா வானா?

மோகன்லால் 'பாபாவின் நகலா வானா?

மருதையன் மார்க்கோனி போலா வானா?

மஞ்சுஓர் கியூரி'யைப்போல் வளருவாளா?

கதிரறுக்கும் பொன்னிமகன் வருங்கா லத்தில்

கதிரியக்கப் புதுமைபல படைக்க வேண்டும்!

முதுகுசுமை தூக்குகிற முத்தன் பிள்ளை

மூளைமாற் றுச்சிகிச்சை தொடங்க வேண்டும்!

மிதிவண்டி ஒட்டுகிற மீரான் செல்வி

மின்னல்களில் மின்சாரம் திரட்ட வேண்டும்!

நதிக்கரையில் மீன்பிடிக்கும் தாமஸ் பெண்தான்

நாளைக்குச் செவ்வாயில் நடக்க வேண்டும்!