பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புல்லறுக்கும் பொன்னிகூட

கல்வி கற்கலாம்; பூத்தொடுக்கும் பூங்கொடியும்

பாடம் படிக்கலாம்!

கல்லுடைக்கும் கந்தன்களும்

கற்கச் செல்லலாம்; கட்டைவிரல் கையெழுத்து கற்றுக் கொள்ளலாம்!

தேய்ந்த நாளை எண்ணிமனம் தேம்பிட வேண்டாம்; ஒய்ந்த நேரம் கிடைக்கும்போது சோம்பிட வேண்டாம்!

வேலைகளில் ஈடுபட்டு

விலகும் விழிகளே, பாடநூலைக் கற்பதற்கு உண்டு வழிகளே!