பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒலங்கள் கேட்டும்நமது ஊன்தசை ஆடவில்லை! 'காலங்கள் மாறும்,உங்கள் காயங்கள் ஆறும் என்று

ஆறுதல் சொல்லக்கூட ஆளில்லை, அடடா! கொஞ்சம் தேறுதல் கூறக்கூடத் திறமில்லா மனிதச்சாதி!

போர்க்கோலம் இல்லாத பொற்காலம் அதைஇந்தப் புவிக்கோளம் காணவேண்டும்!

புவிக்கோளம் முழுவதிலும் பூக்கோலம் போடுகிற புதுக்காலம் வருதல்வேண்டும்!