பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீர்கொடுத்து உன்முகத்தில்

செந்தூரப் பொட்டுவைத்துப் பேர்கொடுத்த சோவியத்தில் பெருந்தீங்கு விளைத்தாயே!

பொறுமைக்குப் பூமியென்பார்; பொய்யாக்கி விட்டாய்நீ!

தருமமும் பொறுக்காத தவற்றைநீ செய்துவிட்டாய்!

நரம்புத் தளர்ச்சியினால் நடுங்குகிறாய்; மண்மகளே! நரம்புச் சிகிச்சையால் உன் நடுக்கத்தைத் தீர்த்து வைப்போம்!

புதுஉலகம் படைப்பதற்குப் புரட்சிகளைத் தீட்டிவரும் பொதுவுடைமை நாடுனக்குப் புதிய அச்சு செய்துதரும்!

0 ஆர்மீனிய நிலநடுக்கம் - 1990