பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகாதேவனே, மதப்பூசல்களை மாற்றிட நீவழி காட்டிடலாமே!

மனிதா. மனிதா... ஐந்து புலன்களை நெறிப்படுத்தத்தான் ஆறாவது புலன் அளித்தேன் உனக்கு! சிந்தனைப் புலத்தில் ஏன் சிலந்திக் கூடு? மூளைப் பரப்பில் ஏன் கரையான் புற்று?

இறைவா, வெண்மணி எரிந்தது மறக்கவில்லை; அயோத்தி இடிந்தது பொறுக்கவில்லை.

இந்த வன்முறையால்... மதவெறியால்

விளைவு என்ன? துளசித் தீர்த்தத்தில் ரத்த வாடை! திருநீற்றுச் சாம்பலில் எலும்புத் துகள்கள்!

அப்பத்தில் மனித தசைத்