இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இல்னும் ஒரு சுதந்தரப் போர்
மண்ணின் மரபுகளை
மகத்தாகப் போற்றுதற்கு
கண்ணின் சுதந்தரத்தைக்
கருத்தாகப்பயிர் செய்தோம்!
தண்ணிரை வார்த்தால்
தவறி விளையுமென்று
கண்ணிரால் காத்தோம்;
கருக விட்டோமின்று!
தள்ளக் கூடாததைத்
தள்ளி வைத்துவிட்டு கொள்ளக் கூடாததைக்
கொண்ட தேசமிது!
புத்தனை காந்தியினை
புதுவெள்ளம் ஒதுக்கியதால்
இத்தரைத் தருமங்கள்
இடப்பெயர்ச்சி ஆகியது!
நீதியின் சாய்வுகளில்
நேர்மை ஓய்வெடுக்கும்;
பாதையின் சரிவுகளில்
பண்புகள் அடிசறுக்கும்!