இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பட்ட மளிப்புவிழா
பாங்காக முடிந்தபின்பு
'பட்டத் தரசர்களோ
பாதசாரி யானார்கள்!
மாலைகளைச் சுமப்பவர்கள்
மண்சுமக்க முன்வந்தால்,
பாலைவனங் களில்கூட
பசுமைப் புரட்சிவரும்!
தோள்களில் சோம்பலுக்குத்
தொட்டில் கட்டிவிட்டு
ஆள்வினை இன்றிநாம்
ஆமைகளாய் வாழ்கின்றோம்!
கொடுமைகளின் பாசறையாய்க்
குறுகிவிட்ட தாய்நாட்டின்
அடிமைகளை மீட்பதற்கு
அணிவகுத்து நில்லுங்கள்!
அன்னையின் தளைநீக்கி
அதர்மத்தைக் களையெடுக்க
'இன்னுமொரு சுதந்தரப்போர்
இன்றைக்கே தொடங்குங்கள்!