பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமுதாய மீட்சிக்குப்

படைந டத்திச்

சந்தங்கள் விருத்தங்கள்

அணிவ குக்கும்!

தமிழச்சியின் கற்பைச் சூறை யாடும்

தருக்கர்களின் கொட்டத்தை

ஈழம் பார்க்கும்!

'தமிழச்சி யின்கத்தி'

அந்த மண்ணில்

தங்கச்சி தாய்மார்கள்

மானம் காக்கும்!

எமதிளைஞர் இலக்கியத்தைத்

தந்த மைக்கு

'எதிர்பாரா முத்தம் இதோ

உந்தன் கைக்கு!