இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஈரோட்டில் சூடேற்று
ஈரடியில் பொய்யாமொழி
ஈரோட்டு அய்யாவழி
இரண்டும் எங்களது இருவிழி இனமானத் தமிழினத்தின் முகவரி:
பிறப்பால் மனிதர் சரிசமம் என்று பெருமை தந்தது குறளேடு - அதை மறுத்த இனத்தின் மமதை அடக்கி மதிப்பைப் பெற்றது ஈரோடு!
ஒழுக்கம் மானம் பண்பா டென்று உரைக்கும் வள்ளுவர் குறள்நாடி, அழுக்கை விலக்கிக் கிழக்கை வெளுத்தது அதுதான் பெரியார் வெண்தாடி!
குறள்மே டையினை ஒதுக்கி விட்டுக் குறிமே டைக்கேன் அலைகின்றாய்! இருளோ டென்ன உன்கூட்டு? - நீ ஈரோட்டில் தீச்சூடேற்று!
&