இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தெல்காஞ்சித் தேர்முடிை
அண்ணாநீ இயற்பெயரில்
அகர முதல்வன்;
அன்னைத் தமிழ்த்தாய்ஈன்ற
அரும் புதல்வன்!
விரலசைவில் இலக்கியங்கள்
பிறக்கும்; அண்ணா
விழியசைவில் ஒரு சேனை நடக்கும் பின்னால்!
குரலசைவில் இலட்சியத்தின்
முழக்கம்; கோட்டை
கொடியசைவில் நல்லாட்சி
செழிக்கும் தெற்குத்
தெருமுனைகள் கூடிவந்து
வணங்கி நின்ற
தென்காஞ்சித் தேர்முனையே!
திராவி டத்தின்
புவிஈர்ப்புத் தானம்நீ புதுமைப் பேச்சின் செவிஈர்ப்புத் தானம்உன் செந்தேன் நாக்கு!
துருப்பிடித்த வார்த்தைகளை தூரத் தள்ளி சுறுசுறுப்புச் சொற்களுக்குச் சூடேற் றியவன்!