இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
-
கவிஞாயிறு அண்ணா!
மேதை நீ பேசத் தொடங்கிய பிறகுதான் மேடைப் பேச்சுக்கு
மீசை முளைத்தது!
எதுகை மோனைகள் உன்
இரண்டு உதடுகள்!
நதியா, நாக்கு? அது
நயாகரா அருவி!
碑 கற்றுத் தேர்ந்த செந்தமிழும் கவனம் பதிந்த ஆங்கிலமும உற்ற இரட்டை மொழியாக உனது நாக்கில் வரும்போது,
தெற்குக் காவிரி ஊற்றெடுக்கும்; தேம்சு நதிக்கரைக் காற்றடிக்கும்!
அண்ணா!
மூடத் தனங்களுக்கு முதுகில் தொட்டில் கட்டிக் கேடத் தனைக் குள்ளும் கிழடு தட்டிப் போனவரை -