பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்தாலும் பேச்சாலும் எழுப்பி நிற்க வைத்து மொழிகாக்க இனம்காக்க முன்வரிசைக் கழைத்து வந்தாய்!

கணித பின்னங்கள் போல் காட்சிதரும் ஏழையரை மனித பின்னங்கள் என்று மதிப்பீட்டில் குறைத்த வரைக்

கண்டு கொதித்தாய், நீ! கைகொடுத்து ஏழையரை ‘சுண்டுவிரல் அல்ல நீ, சுட்டுவிரல்' என்றுரைத்தாய்!

அண்ணா!

'தம்பிக்கு மடல்கள் தீட்டி தன்மான உணர்வை ஊட்டி நெம்புகோல் கொடுத்து எம்மை நிமிர்த்திய அன்னை நீதான்!