பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்டில் அம்பேத்கர்

'ஆதிக் குடிமகனை

ஆதிக்கக் குடிமக்கள் வீதிக்கு அனுப்பிவிட்டு

வேற்றுமைகள் பேசுவதா? - என

பாதிக்கப் பட்டவர்க்குப்

பரிந்துரை யானதுடன்

நீதிக்குக் குரல் கொடுத்து

நிமிர்ந்தெழுந்தார் அம்பேத்கர்!

ஆண்டாண்டு காலம்

அன்னை நாட்டில்

அடிபதிக் கின்ற

மக்கள் பதிப்பில்

தீண்டாமை என்னும்

அச்சுப் பிழையைத்

திருத்தம் செய்திட்ட

தேவன் அம்பேத்கர்!