இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
உண்மையில்நீ அஃறிணையா?
ஒப்பனையால் உயர்திணையா?
கண்ணிமைகடந்து கருமணி
களவு போகிறதே!
உள்ள எழுச்சியின்றி
உறங்கும் தமிழனே
பள்ளியறை பாசறையா? பாய்சுருட்டி வா!
கருவறையைத் தமிழ்தொட்டால் தீட்டாம்? வாவா
கற்பூரத் தட்டுக்குத்
தமிழ் கற்றுத்தா!