பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மையில்நீ அஃறிணையா?

ஒப்பனையால் உயர்திணையா?

கண்ணிமைகடந்து கருமணி

களவு போகிறதே!

உள்ள எழுச்சியின்றி

உறங்கும் தமிழனே

பள்ளியறை பாசறையா? பாய்சுருட்டி வா!

கருவறையைத் தமிழ்தொட்டால் தீட்டாம்? வாவா

கற்பூரத் தட்டுக்குத்

தமிழ் கற்றுத்தா!