பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னும் 'பாரதம் ஒருவீடு;

மாண்புறு இமயம் கூரையடி!) மின்னும் பம்பாய் வாசலடி,

'மைசூர் சந்தன வாயிற்படி! கன்னிக் குமரி குளியலறை,

'காசி என்றொரு பூசையறை: இன்னும் ஜெய்ப்பூர் பள்ளியறை:

இனிதாம் ஆக்ரா மாடியறை:

போற்றும் தில்லி கூடமடி!

"பீகார் துளசி மாடமடி! ஏற்றும் 'காஷ்மீர் தோட்டமடி,

ஏர் தஞ்சை உணவுக் கூடமடி! மற்றும் உள்ள மாநிலங்கள்,

மனையில் உள்ள தனியறைகள்! உற்றவர் அறுபது கோடியினர்;

உறவாய் வாழ்வது ஒருவீடு!

0 சென்னை பாரதியார் சங்கம் நடத்திய அனைத்துக் கல்லூரிகளுக்கான கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை - 19760