பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் கட்சிகள் விலைபோகும் ஆண்டவன் கட்சிகள் நிலைமாறும்! சரிவை நோக்கி நடைபோடும்

சாதிக் கட்சிகள் வலையாகும்!

ஏய்ப்பவ னெல்லாம் கோபுரத்தில் ஏமாந்த தவர்கள் ஓர்புரத்தில்! மேய்ப்பவ னெல்லாம் புலியாக மேயும் ஆடுகள் பலியாக!

பத்துப் பேர்க்குச் சோலைவனம் பாதிப் பேர்க்குப் பாலைவனம்! எத்திப்பிழைக்கும் மீதிப்பேர்க்கு இந்திய நாடு சொந்தநிலம்:

ஏனோ தானோ மனப்பான்மை எங்கும் இதுதான் பெரும்பான்மை! ஆணோ பெண்ணோ என்றாலும் அவரவர் தொழிலில் பொறுப்பின்மை!

நானோ நீயோ உழைக்காமல் நமது கூரை வழியாக வானோ மண்ணோ வழங்குமென வாசல் திண்ணையில் காத்திருப்போம்!