பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடி மரமே...

அன்னை நாட்டின் மானம் காக்கும்

அற்புதக் கொடிமரமே - நீ

ஆடைகாய்க்கிற உடைமரமாக ஆவது எப்போது? - உன்

சின்னச் சீலை சேலைக ளாக

நீள்வது எப்போது? - அட உன்னைச்சுற்றும் புதல்விகள் மேனியைச் சுற்றுவ தெப்போது?

பஞ்சா லைகளில் - எங்கள்

பாரதப் பாஞ்சாலிகள்

பருத்தி நூலுக்கு விருத்தியுரை எழுதிவிட்டு தரித்திருப்ப தென்னவோ தரித்திர ஆடைதான்!

அன்னை நாட்டின் மானம் காக்கும்

அற்புதக் கொடிமரமே ion 岛

ஆடை காய்க்கிற உடைமரமாக ஆவது எப்போது?