பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேசப்படத்தில் கறை

கூரையில் கோத்திரங்கள் - நடுக் கூடத்தில் சாத்திரங்கள் சேரிகள் ஊர்ப்புறத்தில் - வெறும் சேர்க்கைகள் காகிதத்தில்!

மெத்தப் படித்துமென்ன? - பெரும் மேதைகளா கியென்ன? எத்தனை சாதிச்சனம்? - இன்னும் ஏனிந்த சண்டித்தனம்?

நால்வகைத் தர்மங்களா? - நாடி நரம்பிலும் வர்ணங்களா? கால்நடைச் சந்தைகளா? - அதைக் காத்திடச் சங்கங்களா?

மேல்வகை வாய்க்கணக்கு - தினம் மிதிபடும் கீழ்க்கணக்கு நால்வகைப் பொய்க்கணக்கு - தப்பாய் நம்மவர் மனக்கணக்கு:

கருவில் விழுந்தவிதை - இது கல்லறை போகும்வரை தெருவில் வளர்ந்தகுறை - நம் தேசப் படத்தில் கறை: