பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதா,

பூட்டிய இதய வீட்டுச் சுவரில், புன்னகை என்றொரு சன்னல் வை! முட்டிய நெருப்பு மூச்சில் எதற்கு? முகத்தில் தென்றலை உலவச் செய்!

கதிரெழும் கிழக்கு ஒளிபுக உனது கண்ணிமைக் கதவைத் திறந்து விடு!

புதிய அச்சில் பூமிப்பந்தை - உன் புருவ மத்தியில் சுழல விடு!

-

--o

-- ...