பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. .

நச்சு விதைகள்

ஆதியிலே வந்ததல்ல சாதிப் பிரிவுகள் - இந்த அசைநிலைகள் நடுவில்வந்த சூதுப் பிரிவுகள்!

பாதியிலே தீட்டிவைத்த நால் வருணங்கள் - பொதுப் பாதையிலே தூவிவிட்ட நச்சு விதைகள்!

கருவறையில் வர்ணபேதம் போகவில்லையே - இங்கு கல்லறைகள் கூட ஒன்று சேர வில்லையே!

ஆதிமகள் ஒரன்னையின்

ஈவுகள் தானே - அந்த

தியினை மறந்தால்நாம் வுகள் தானே!