பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மண்ணும் விண்ணும்

159


வாழ்ந்த பெரியவர்கள் விளக்கிச் சென்றுள்ளார்கள். இன்று உலகம் உருண்டையென்று மேனாட்டு விஞ்ஞானம் கண்ட உண்மையை அன்றே தமிழ் நாட்டவர் கண்டு கூறினர். விஞ்ஞானக் கண்ணுக்கு அப்பாற்பட்டு வரம்பற்ற உலகங்கள் உண்டு என்பதையும் அவர்கள் உணர்ந்து கூறினார்கள். அவ்வாறு கூறியவர்களுள் தலைசிறந்தவர் மாணிக்கவாசகர்.

தமிழ்நாட்டுக் கவிதை உலகில் நுழைந்து பார்ப்போமாயின், பல உண்மைகள் புலனாகும். இயற்கையைப் பாடினும். அன்றி இறைவனைப் பாடினும், அதிலெல்லாம் உலகம் பற்றியும் அதிலுள்ள உயிர்களின் வாழ்வுபற்றியும் பல குறிப்புக்கள் அமைந்துள்ளன என்பது. கவிதை வழிச் செல்வார்க்குப் புலனாகும். ஆண்டவனைப் பாட வந்த அடிகள் மாணிக்கவாசகர். திரு அண்டப் பகுதி என்ற ஒன்றை அமைத்து, அதில் உலக அமைப்பு, வான முகட்டின் நிலை ஆகியவற்றை விளக்குகின்றார். 'அண்டப் பகுதி' என்பதன் பொருள், 'வான முகட்டை விளக்கும் பகுதி' என்பதே.

‘அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இல்நுழை கதிரின் துன்அணுப் புரையச்
சிறிய வாக’

அமைகின்றன என்று, அவர் இவ் வான முகட்டைப்பற்றிக் கூறும்போது வியவாதிருக்க முடியுங்கொல்! இன்றைய மேலைநாட்டு ஆய்வுக்களங்கள் அத்தனையும் ஆய்ந்து ஆய்ந்து கண்டும் காண முடியாது நிற்கின்ற இத்தன்மைகளையெல்லாம் அவர் இந்த அடிகளில் கூறுகின்றார். ‘இவ்வுண்மைகளை அவர் எப்படி அறிந்தார்? எந்த ஆய்வுக்களம் அவருக்குத் துணையாயிற்று?’ என்பனவெல்லாம் ஈண்டு நமக்குத் தேவையில்லை. மண்ணும் விண்ணும் கலந்த இந்த நிலையைப்பற்றி மேலைநாட்டு ஆய்வாளர்களெல்லாம் காண்பதன் முன்னமே