பக்கம்:கவிதை உள்ளம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்


உண்ணும் செயல்மறந்தேன்-அவன்
உருவெந்தன் கண்முன்னே உற்றிருக் கின்றதால்
எண்ணமெலாம் அவனே-எனை
என்றும் உடன்வைத்து ஆண்டுகொள் ளென்றுமே
(சென்று)
 
அன்பால் என் உள்ளமெல்லாம்-தொட்ட
அன்று முதற்கொண்டு ஆறாய் உருகுதே
இன்ப நல னளிக்க-அவனை
இதயத்தே எண்ணிடில் ஏக்கமுண்டோ மற்றே
(சென்று)

அவனுடன் சேர்ந்தவுடன்-கிளியே
அரிய பொருளுனக் களித்து மகிழ்விப்பேன்
தெளிவாக அவனிடத்தே-உடன்

தேடிவந் தேமணம் நாடிப் புரிந்திட (சென்று)

————————

103

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/105&oldid=1387791" இலிருந்து மீள்விக்கப்பட்டது