பக்கம்:கவிதை உள்ளம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்



முயக்கில் அகன்றிருந்த இருவருடல்
முன்னமே ஒன்றாய் வந்து உற்றிடவே
அயற்சி அகன்றுடனே இன்பவெள்ளம்
ஆறாய்க் கடலினிடை ஓடியதே

காதற்பெருக்கினிலே கட்டி அனைத்து
கன்னஞ் சிவக்கஉயர் முத்தமே கொண்டோம்.
ஓதற் குரியர்இனி இவ்வுலகிலே
உண்டோ இதுசரதம் எங்களின்பத்தை
ஆதரங் கொண்டதொரு ஆசைமுத்தமே
அடியேங்கள் இன்பமதை ஆண்டதுவே
ஓதற்குரிய புகழ்முத்தமே முத்தம்

உயர் அன்பின் வழிவரு முத்தமே முத்தம்.



 

107

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/109&oldid=1387863" இலிருந்து மீள்விக்கப்பட்டது