இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காதல்
முயக்கில் அகன்றிருந்த இருவருடல்
முன்னமே ஒன்றாய் வந்து உற்றிடவே
அயற்சி அகன்றுடனே இன்பவெள்ளம்
ஆறாய்க் கடலினிடை ஓடியதே
காதற்பெருக்கினிலே கட்டி அனைத்து
கன்னஞ் சிவக்கஉயர் முத்தமே கொண்டோம்.
ஓதற் குரியர்இனி இவ்வுலகிலே
உண்டோ இதுசரதம் எங்களின்பத்தை
ஆதரங் கொண்டதொரு ஆசைமுத்தமே
அடியேங்கள் இன்பமதை ஆண்டதுவே
ஓதற்குரிய புகழ்முத்தமே முத்தம்
107