இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிதை யுள்ளம்
மன்னியநற் கலவியினும் மகிழ்வெய்தித் திளைத்திட்டேன்
மகிழ்ந்த பின்னை
இன்னிய நற் கருவியுட னிசைபாட யான்கேட்டு
இருக்கின் றேனால்!
அப்பொழுது யாரோவந் தெனையழைக்க அலறிமிக
எழுந்து காண
எப்பொழுது மிருக்குமிடம் கல்லூரி விடுதியென
யேங்கிக் கண்டேன்
செப்புதற்கு மறியாமல் தேடிவந்த நண்பனுடன்
தின்மும் போல
அப்புறஞ்சென் றென்கடனைக் கழித்தண்ணல் அடியுன்னி
1934-ல் பாடியது
114