இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இயற்கை
பொன்னில் ஒளியாய்நின்ற புண்ணியமே - உயர்
பொருப்பின் சிறப்பாய் நின்ற கண்ணியமே
மண்ணில் கலந்துநின்ற நற்றிறமே - உந்தன்
மாண்பு இம்மட்டோ நிற்கும் சொல்லுவமே!
தெங்கங் காயாய்த் திரண்ட செவ்வழகே - அன்றித்
தெவிட்டாத தேனாய் வந்த நல்ருசியே
பொங்கு கடலலையில் புரண்டிடுவாய் - உனைப்
போற்றிடின் உற்றிடுவோம் புகழ் நிலையே.
குழவிகள் ஓசையிலும் பாட்டினிலும் - மற்றக்
குழல் ஒலி யாழொலி யாவையிலும்
அழகினைக் காட்சியொன்று அஞ்சலித்து - நிதம்
119