கவிதை யுள்ளம்
பார் நிறைந்த பஞ்சமதைப் பார்ப்பதற்கும் எண்ணுதற்கும்
பண்ப தாமோ
ஆர்புரிந்த கொடுமையிது ஐயாவோ காலமெனும்
அரிய செல்வா!
3
தீக்காலம் இதுவேயோ செல்வர்களின் நல்லறமும்
செத்த தேயோ
கோக்களது நீதிமுறை குன்றியதோ அன்றியேன்
கொடிய பஞ்சம்
மிக்கான நிலையினிலே மேதியினில் நிலைத்திட்டு
மிடிமை தந்து
சாக்காட்டைப் பலர்க்களித்துத் தவிர்த்திடவே
செய்வதிது தக்க தாமோ?
4
ஏரிகுளங் காவெல்லாம் இல்லையே நீர் சிறிதும்
இதுவே யன்றிப்
பாரினிலே கால்நடைகள் பகர் உணவுஞ் சிறிதுமின்றிப்
பதறி நின்று
ஓரிரவை ஒருயுகமாகக் கழித்திடவே உயிர்க்கொடுமை
உண்டு செய்தாய்
ஆருடன் நீ கொண்டிட்டாய் அடங்காத கோபம் இது
அரிது மாதோ
5
தாவரங்கள் நீரற்றுத் தலை குனிந்து தருக்கழிந்து
தாழ்ந்து போக
மாமிருக வகையெல்லாம் மயலுற்று நீரற்று
மயங்கி நிற்க
சாமினி நாம் ஏன்றிட்டே தாழ்வடைய மக்களுமே
தாங் கோணாத
தீமின்னும் கொடும் பஞ்சம் செய்திட்டாய் காலமேனும்
செம்மைத் தேவா!
6
128