இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இயற்கை
கற்காலம் உடனளித்து நன்மழையை நிலத்தளித்து
நாட்டி லெங்கும்
பொற்பான சாந்தமெனும் பொறையளித்து இன்பநிலை
பொங்க வைத்து
உற்பாதச் செயலகற்றி உயர்வான நிலை இயற்றி
உயிரைக் காத்து
பொற்காலத் தேவாந் பூவுலகில் எங்களையே
புரக்க வாவா!
13
பொல்லாத பஞ்சத்தைப் பொருத்தரிய பெரும்போரைப்
போக்கி யெங்கும்
எல்லாரும் இன்பநிலை எய்திடவும் இருநிலத்தில்
மண்ணுக்காக
வல்லாளர் இடுஞ்சண்டை வற்றிடவும் வளம் பலவும்
வளரவுந் தான்
நல்லானே காலமெனும் நற்றேவா நங்களையே
காக்க வாவா
14
இக்கவிதை 1940ல் உலக இரண்டாம் போர் தொடங்கிய காலத்தில் எழுதியது.
131