பக்கம்:கவிதை உள்ளம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயற்கை


கற்காலம் உடனளித்து நன்மழையை நிலத்தளித்து
        நாட்டி லெங்கும்
பொற்பான சாந்தமெனும் பொறையளித்து இன்பநிலை
        பொங்க வைத்து
உற்பாதச் செயலகற்றி உயர்வான நிலை இயற்றி
        உயிரைக் காத்து
பொற்காலத் தேவாந் பூவுலகில் எங்களையே
        புரக்க வாவா! 13

பொல்லாத பஞ்சத்தைப் பொருத்தரிய பெரும்போரைப்
        போக்கி யெங்கும்
எல்லாரும் இன்பநிலை எய்திடவும் இருநிலத்தில்
        மண்ணுக்காக
வல்லாளர் இடுஞ்சண்டை வற்றிடவும் வளம் பலவும்
        வளரவுந் தான்
நல்லானே காலமெனும் நற்றேவா நங்களையே
        காக்க வாவா 14



 

இக்கவிதை 1940ல் உலக இரண்டாம் போர் தொடங்கிய காலத்தில் எழுதியது.

131

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/133&oldid=1388633" இலிருந்து மீள்விக்கப்பட்டது