இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சமுதாயம்
சேர வரும்
அருமைத் தமிழர் கலைபயின்று
அன்புப் பயிரும் தலைநிமிர்ந்து
பெருமை பிறங்கிப் பேருலகில்
பெறுதற் கரிய பேறுபெற
உரிமைத் தமிழின் சுவையுணரும்
உயர்ந்த பெரியீர்! இதுகாணும்
மறுமை தனக்கும் மகிழ்வளிக்கும்
மருவி வாரும் சகத்தீரே!
1
அன்பு பெறுவோம் கலை பெறுவோம்
அரிய நாட்டின் விடுதலையாம்
இன்பம் பெறுவோம் நலம் பெறுவோம்
யாவும் பெறுவோம் இந்நிலத்தோ
வன்பு அகற்றி வெறுப்பகற்றி
வேறாம் பகைகள் விளைவகற்றி
துன்ப மகற்றிச் சுகம் பெறவே
சூழ வாரும் சகத்தீரே!
2
சாதி பேதம் எத்தனை தான்
சமயப் பிணக்கு பலகோடி
நீதி அறியா மடமையெலாம்
நீக்கி நன்மை நிலைநாட்ட
ஓதும் கலைகள் நலனுணர
ஒருமை வாழ்வின் பயனடைய
யாதும் பெறவே இந்நிலத்தே
இயைய வரும் சகத்தீரே!
3
134