இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சமுதாயம்
நமக்குள் பிளவு வேண்டுவதேன்
நாமே நம்மைக் கொடுமை செய்து
சுமைக்கு ஆளாய் நின்றிட்டால்
துன்பம் துடைப்பார் யாருளரோ
இமைக்கும் பொழுதில் எல்லோரும்
இன்பத் திருந்தோம் என எண்ணி
நமக்கு உரிய விடுதலையை
நாட வாரும் சகத்தீரே!
ஒன்றே குலமும் நம்மவர்க்கே
உணரும் இரையும் ஒன்றாமோ
என்றோ நம்மை இவ்வாறு
யாரோ பிரிக்கக் காத்திருந்தார்
இன்றே நமது துயரெல்லாம்
இரியுங் கால மாதலினால்
நன்றே வருவீர் விடுதலையை
நாடி வருவீர் நானிலத்தீர்!
ஒருமை வாழ்வே இந்நிலத்தில்
உயர்ந்த வாழ்வு ஆதலினால்
அருமை நாட்டின் அல்லலெலாம்
அஞ்சி ஓட ஆண்மையுடன்
பெருமை பெறவே எந்நாளும்
பெறுதற் கரிய நலமடைந்து
உரிமை வாழ்வில் உயர்ந்தோங்க
135