பக்கம்:கவிதை உள்ளம்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமுதாயம்


சாதிகுலப் பேதமின்றித் தாழ்வு உயர் எனுமவற்றை
நீதி அல் வெனவகற்றி நேர்மையுடன் வாழ்ந்திடுக!
ஓதுமுயர் தமிழ்வளர்க உண்மை அரசியல் நிலைக்க!
கோதிலமு தாயஉயர் கொற்றவன்தாள் போற்றுகவே!

உண்ணுதற்கு உணவு பெற்று உடுப்பதற்கு உடையுமுற்று
எண்ணுதற்கு நல்லெண்ணம் யாவுமுடன் கலந்திடுக!
மண்ணுலகில் துயர்மறைக மதிநிறைந்த செயல் சிறக்க!

எண்ணரிய தமிழ்க்கலையும் ஏற்றமுற வாழியவே!

137

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/139&oldid=1387718" இலிருந்து மீள்விக்கப்பட்டது