இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிதை யுள்ளம்
நல்ல உழைப்புகொண்டு
நாடும் பணிசெய்தாலும்
இல்லையே கூலிதானுமே-இக்குறைபோக்க
(தொழி).
தொழில்முறை ஏற்றமென்று
சொல்லுவார் வாய்ச்சொல்வீரர்
செயலிடைத் தாழ்த்தி வைத்தார்
தீமையறுத்தே
(தொழி).
கூலி குறைத்து விட்டார்
கொடுமை இழைத்துவிட்டார்
வாழ்க்கை கெடுக்கநின்றார்-அவர் வாட்டமற
(தொழி)
:
அருந்தவே கூழுமற்று
அணியவே ஆடையற்று
பெரும்பிணி வாழ்வையேற்றார்-பிரியநண்பீர்
(தொழி).
வஞ்சக மற்றாரவர்
வழியைக் கெடுக்கச்சிலர்
மிஞ்சியே மேல்வீழ்ந்தார்-அவரகற்றி
(தொழி):
தொழிலாளர் சங்கமெங்கும்
துலங்க அருள்புரிய
வழிவரு இறையைப் போற்றியே-வாழ்ந்திட
என்றும்
(தொழி):
144